இதோ நம் தாய்
கௌதமியைவிட ஆனந்திக்கு அவள் அம்மாவையே பிடித்திருக்கிறது . கௌதமி ஆனந்தியினுடைய தாய்தான் என்றபோதிலும் கௌதமியை பிடிக்காத ஆனந்தி வாழ்நாளெல்லாம் தாய்மையை தேடியே அலைந்து திரிகிறாள் . தாய்மை என்பது உடலா ? உணர்வா ? அதை தன்னால் உணர முடியுமா ? பிறருக்கு அந்த உணர்வை தர முடியுமா ? வாழ்க்கை முழுவதும் ஆனந்தியை இந்த கேள்விகள் விடாமல் துரத்துகின்றன . கேள்விகளுக்கான விடைகளை கண்டடைய தலைகீழாகிப்போன தன் வாழ்வில் தன்னந்தனியே தேடி அழைகிறாள் . தன் இருப்பு , தனிமை , தேடல் , ஆழ்மன போராட்டங்கள் , எதிலும் ஓர் நிலையற்றத் தன்மை என ஆனந்தியை வாழ்க்கை அலைக்கழிக்கிறது . ஆனாந்தியின் வாழ்வின் வழியே நம் சமூக யதார்த்தங்கள் சத்தமின்றி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது . “ இயற்கையில் எல்லாமே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது . நாம் இயற்கை என்றால் , நமது எண்ணங்கள் , உணர்வுகள் , முடிவுகள் எல்லாமும் இயற்கைதான் . பிறவற்றைச் சுரண்டாத எல்லா உணர்வுகளும் இயல்பானவையே , ஏற்கப்படவேண்டியவையே .” ஏற்கிறோமா நாம் ? உலகோடு ஒத்து வாழச் சொல்லி ...